திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் சுமார் 111 கம்பெனிகள் கலந்துக்கொண்டது. ஒவ்வொரு கம்பெனியும் அவர்களுக்கு தேவையான இடங்களை நிரப்புவதற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூர்யகுமார், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர், வேலை வாய்ப்பு இணை இயக்குனர் லதா, திட்ட உதவி இயக்குனர் பிரியா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரேவதி, உதவி அலுவலர் ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment