ஜோலார்பேட்டையில் 30 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த கலெக்டர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எம்எல்ஏ!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 3 March 2024

ஜோலார்பேட்டையில் 30 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த கலெக்டர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எம்எல்ஏ!.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பயனியர் நிழற்குடம் இல்லாமல் இருந்து வந்தது இது குறித்து நிழல் கூட வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அதன் கோரிக்கையை ஏற்று ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 30 லட்சம் மதிப்பில் பிரம்மாண்ட பயனர் நிழற்கூடம் கட்டப்பட்டது.

இதனை இன்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி மற்றும் அரசு அதிகாரிகள் முக்கிய திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/