திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகராட்சி அருகே சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது, இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவாவின் தாக்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளதால் தமிழக சுகாதாரத்துறை முகக் கவசம் சமூக இடைவெளியை கட்டாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு இன்றி முகக் கவசம் அணியாமல் வருவதால் மீண்டும் வேகமாக குரல் கூடிய சூழ்நிலை உள்ளது, இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகக்கவசம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மாணவ மாணவிகளுக்கு முதலில் அவருடைய பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் முக கவசத்தின் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும் என்று கூறுகின்றனர்.
No comments:
Post a Comment