வாணியம்பாடியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு யூ.ஆர்.எஸ்.சி முன்னாள் விஞ்ஞானி அருணாச்சலம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், மாதிரி ஏவுகணை விண்ணில் சோதனையிட்டு கொண்டாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வருட்சா பவுண்டேஷன், இசுலாமிய கல்லூரி ரோட்ராக்ட் சங்கம், இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் டீம் மற்றும் சிந்தகமாணி பெண்டா பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோர் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 91வது பிறந்தநாள் விழா இஸ்லாமிய கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் டி.முஹம்மத் இலியாஸ் தலைமை வகித்து துவக்க உரையாற்றினார். கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் சிவராஜி, பேராசிரியர் லியாகத் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், சசிகுமார், ஆம்பூர் ரோட்டரி சங்கம் தலைவர் சந்திரன், சின்னத்திரை புகழ் கே.பி.வை அமீர் சந்தானம், தலைமை ஆசிரியை லதா தாமோதிரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக யூ.ஆர்.எஸ்.சி முன்னாள் உதவி திட்ட இயக்குனரும் விஞ்ஞானியுமான அருணாச்சலம் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும், 91 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து சிந்தாமணி பெண்டா பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த மாதிரி ஏவுகணையை விண்ணில் சோதனையிட்டு பாராட்டினார்.
நிகழ்ச்சியை ஆம்பூர் பெத்தலகம் பள்ளி ஆசிரியர்கள் சரவணன் ஜெயசீலன், சிந்தகமாணி பெண்டா பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அருண்குமார், வாணியம்பாடி டி.வி.கே பள்ளி ஆசிரியர் நிகானந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment