வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி, வட்டாட்சியர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.


இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், வீடு வசதி குடியிருப்பு உதவி நிர்வாக பொறியாளர் வையாபுரி ஆகியோர் வங்கி கடன் பெற வழி முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்துகொண்டு வளையாம்பட்டு ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடு ரூ1 லட்சத்து 65ஆயிரம் மதிப்பாகும்.  வீட்டை குறைந்த பட்சம் ரூ 30 ஆயிரம் முன்பணம் கட்டி மீதுமுள்ள பணத்தை வாங்கி மூலம் கடன் பெறவும், அதனை தவணை முறையில் மாதம் மாதம் வங்கிக்கு செலுத்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நூருல்லாபேட்டை ஏரி கால்வாய் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வீடுகளை இழுந்த 48 குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.


இதனை கேட்ட வீடுகளை இழுந்த 48 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கூட்டத்தை  புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து முன்பணம் செலுத்தி இருந்த 74 பேருக்கு  வங்கி மூலம் கடன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ஷண்முகம், வருவாய்த்துறையினர், பல்வேறு வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/