மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக AITUCயினர் மத்திய அரசின் 44 சட்ட முனையங்களை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டம் 150க்கும் மேற்பட்டோர் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 January 2023

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக AITUCயினர் மத்திய அரசின் 44 சட்ட முனையங்களை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டம் 150க்கும் மேற்பட்டோர் கைது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசு 44 சட்ட ஆலயங்களை ரத்து செய்ய கோரி தமிழக அரசிடம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC (அகில இந்திய தொழிற்சங்க பேராயம் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய AITUC உறுப்பினரும் மாவட்ட பொதுச் செயலாளருமான தேவதாஸ் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அதில் முக்கிய கோரிக்கைகளாக அனைத்து தொழிலாளர்களுக்கும் 21,000 குறைவில்லாத மாத ஊதியம் வழங்கிட வேண்டும், நடைபாதை வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் ஸ்மார்ட் கார்டு மற்றும் வங்கி கடன் உதவி வழங்கிட வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்.


இபிஎஸ் நல வாரியம் உள்ளிட்ட அனைத்திலும் 6000 மாத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 150க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் இரு வழி சாலைகளிலும் AITUC சங்கத்தினர் காலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/