தாமலேரிமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு கொடுக்கும் விழாவில் தாமதமாக வந்ததால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட எம்பி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

தாமலேரிமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு கொடுக்கும் விழாவில் தாமதமாக வந்ததால் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட எம்பி.


தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து குடும்பங்களும் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமேலேரிமுத்தூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்க காலை 10.30 மணிக்கு  அளவில் நடைபெற இருந்தது.


ஆனால் சில காரணங்களால் மதியம் 2 மணி அளவில் பொங்கல் தொகுப்பு வழங்க சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன் அண்ணாதுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



அப்போது பொதுமக்களிடம் உங்களை அதிக நேரம் காக்க வைத்ததற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி பொங்கல் தொகுப்பு வழங்க ஆரம்பித்தார். இச்சம்பவம் பொதுமக்களின் பாராட்டுதல்களை பெற்றது மேலும் சுமார் 50 பயனாளிகளுக்கு  எம்பி பொங்கல் தொகுப்பு வழங்கினார்.


எம்பி அங்கிருந்து சென்ற பின் சுமார் 1500 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/