
பெற்றோர்களை மாணவர்கள் மலர்தூவி வரவேற்றனர். நுழைவு வாயிலில் அகல் விளக்கு ஏற்றி எழுதப்பட்ட எண்ணும் எழுத்தும் வாசகம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. வகுப்பறை முழுவதும் புதிய புதிய வண்ண வண்ண கற்றல் உபகரணங்களும், துணை கருவிகளும் அமைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் வகுப்பறையை பார்த்து வியந்தனர். மாணவர்களின் தனித்திறமைகள் பெற்றோர்களுக்கு பொம்மலாட்டம், பாடல் ,தனி நடிப்பு, குழு நடிப்பு மூலம் விளக்கினர். புத்தகங்களை பெற்றோர்கள் முன்னிலையில் படித்துக் காட்டினர். கரும்பலகையில் உள்ளதையும் வாசித்துக் காட்டினர்.
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இணைந்து போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்கு கிரீடம் சூட்டி பரிசு கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்த பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தேநீர், பிஸ்கட், இனிப்புகள் வழங்கப்பட்டது. இக் கொண்டாட்டத்தில் தற்காலிக ஆசிரியர் சரளா, சத்துணவு ஊழியர் அருள்மொழி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுபா, வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெரும் மகிழ்ச்சி கொண்டனர். இறுதியாக உதவி ஆசிரியை உமாராணி நன்றி கூறினார். விழா இனிதே முடிந்தது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment