திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடியது, - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 May 2023

திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடியது,


கந்திலி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா, ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் ஊர்நாடு கோவிந்தராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தா சண்முகம்   ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. 

திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக  ஹீரோ ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனம்  இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் இருசக்கர வாகனமும்  உட்பட மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்பட்டது. 



திருவிழாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர். இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை  வட்டாட்சியர்  சிவ பிரகாசம், கோட்டாட்சியர்  லட்சுமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தனர், மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை   சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி துணைச் சேர்மன் மோகன் குமார் ஆகியோர் பங்கேற்றனர், திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/