வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் மதிமுக சார்பில் ஆளுநர் என்.ஆர்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2023

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் மதிமுக சார்பில் ஆளுநர் என்.ஆர்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் மதிமுக சார்பில்  அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் என்.ஆர்.ரவியை, குடியரசு தலைவர் திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை வகதிதார். நகர செயலாளர் ஏ.நாசீர் கான் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர திமுக  செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கழகம், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/