ஆம்பூரில் திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி பெண் வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2023

ஆம்பூரில் திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி பெண் வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் திருமணம் நடந்து இருப்பதை மறைத்து  ரெட்டி தோப்பு  பகுதியைச் சேர்ந்த ஹமீதா பானு (25) என்பவரை கடந்த வாரம் திருமணத்திற்காக பெண் பார்க்க அபூபக்கர் சித்திக் சென்றதாகவும் அபூபக்கரை தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறி ஹமீதா நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த அபூபக்கர் தான் ஒரு (ஆம்பூர் எக்ஸ்பிரஸ், நமது தேடல்) செய்தியாளர்,  உன்னையும் உன் குடும்பத்தாரையும் பழிவாங்காமல் விடமாட்டேன் எனக்கூறி மிரட்டியுள்ளார், இதுகுறித்து தட்டிக் கேட்ட பெண்ணின் தாயையும் தாக்க முயற்சி செய்து, ஹமிதாவையும் கீழே தள்ளி அவரது ஆடைகளை கிழித்து தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து ஹமிதா பானு அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் அபூபக்கர் சித்திக்கை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அபூபக்கர் சித்திக்  வாணியம்பாடி பகுதியில் பான்பராக் விற்பனை செய்த கடையில் புகுந்து செய்தியாளர் என கூறி மிரட்டி பணம் பறித்த சம்பவம், 2016 ஆம் ஆண்டு  ஆம்பூரில் இளம்பெண்ணை  காதலிப்பதாக கூறி  மிரட்டியது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டு அதன் மீதான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிட தக்கது.


செய்தியாளர் என்ற போர்வையில் காவல் துறையினரிடம் பழகி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து உலாவரும் இது போன்ற போலிகள் மீது மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/