திருப்பத்தூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமையில் துவங்கப்பட்டது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் உமா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி என பல்வேறு கூட்டணி கட்சியை சார்ந்த தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.


இந்த கையெழுத்து இயக்கம் அனைவரிடத்திலும் கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு கொண்டு வரும் அனைத்து திட்டத்திற்கு முட்டு கட்டை போடும் தமிழ்நாடு ஆளுநர் பிஜேபி கட்சியின் பினாமி போல செயல்படுவதை கண்டித்து தொடர் கையெழுத்து இயக்கம் தொடரும் என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட இளைஞரணி சரவணன், அவைத்தலைவர் கிருஷ்ணன் பொருளாளர் மகேந்திரன், துணை செயலாளர் சந்திரசேகரன் இமயவர்மன் ஒன்றிய செயலாளர் கணேசன் பொன்னுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment