திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூட்டிய வீட்டிற்குள் செம்மர கட்டைகள் இருப்பதை உறுதி செய்தனர்.


இதனை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் பதுக்கி வைத்து இருந்த சுமார் ஒரு டன் அளவிலான செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment