தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிக்காரரிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பணம் வாங்கும் வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 July 2023

தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிக்காரரிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பணம் வாங்கும் வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடி அமைந்துள்ள பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து வேலூரை நோக்கி கிரானைட் கல் ஏற்றிச்சென்ற லாரி காரர்களிடம் இருந்து அம்பலூர் காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் பணம் வாங்கக்கூடிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இதனால் லாரி ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாகவும் எனவே போலீசார் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/