திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நாச்சியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ராமன் வயது 62, இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குந்தகைக்கு எடுத்து வாழை தோப்பு நடுவே கஞ்சா பயிரிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜன் அவருடைய வாழைத்தோட்டத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் வாழை தோட்டத்தின் நடுவில் இராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந்தது.


அதன் பின்னர் கஞ்சா செடிகளை பிடிங்கி காவல் நிலையம் கொண்டு வந்தனர் மேலும் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளின் மொத்த எடை இரண்டரை கிலோ ஆகும், மேலும் குருசலப்பட்டு போலீசார் ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment