திருப்பத்தூர் அடுத்த என்.எம்.கோயில் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 September 2023

திருப்பத்தூர் அடுத்த என்.எம்.கோயில் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று என்.எம்.கோயில் ஆரம்ப துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரம் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ஆய்வு செய்தார். 

அப்போது மாவட்ட ஆட்சியரும் பள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குறைவான சாப்பாடு இருந்ததால் குழந்தைகள்  பற்றாக்குறையுடன் எழுந்து சென்றனர். அதனால் சமையல் செய்யும் பெண்களிடம் மாணவ, மாணவிகள் வயிறு நிறைய சாப்பிடவேண்டும். இல்லை என்றால் தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்தார். 


அதனை தொடர்ந்து மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியையும் ஆய்வு செய்தார். அருகில் இருந்த 8-ம் வகுப்பிற்கு சென்ற ஆட்சியர் மாணவிகளிடம் பாடங்களை படிக்க சொல்லி அவர்களின் வாசிப்புத்திறனை கண்டறிந்தார். இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து படியுங்கள் படிப்பு மட்டுமே ஒருவரை உயர்த்தும் என்றும் அறிவுரை வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையராஜா  மற்றும் துணைத் தலைவர் வடிவேல் அரசு அதிகாரிகள் பல நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/