திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன் பிரேம்குமார் விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர்கள் என ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தனர். இதில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கிரிக்கெட் போட்டி 25, 26, 27 என மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் பரிசு 1 லட்சத்து 100 , இரண்டாம் பரிசு 50 ஆயிரத்து 100, மூன்றாம் பரிசு 25 ஆயிரத்து 100, நான்காம் பரிசு 15 ஆயிரத்து நூறு மற்றும் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசு 3 என மொத்தம் 11 பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment