சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தை திறந்து வைத்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 October 2023

சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தை திறந்து வைத்த A நல்லதம்பி MLA.


திருப்பத்தூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சின்னாரம்பட்டி ஊராட்சியில் AGAMT-II (2022-23) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக  கட்டிட திறப்பு விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ பாஸ்கர பாண்டியன் அவர்களின்‌ தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A  நல்லதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி விழா பேருரை ஆற்றினார்‌.

இந்த இனிய நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்டக்குழு உறுப்பினர் திரு கே ஏ குணசேகரன் அவர்கள் மற்றும் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் திரு எம் சண்முகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர்  கே முருகேசன் மாவட்ட திட்டக் குழு இயக்குனர் திரு செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி விஜயகுமாரி, ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் தாமோதரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவிகா முருகன்  வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஒன்றிய பொறியாளர் செல்வி, மற்றும் ஒன்றிய துணை செயலாளர் தீபா, ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி கார்த்திகேயன், நித்தியானந்தம், மற்றும் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பச்சமுத்து, முரளிதரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/