திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன், தலைமை ஆசிரியர் செலின் ஏஞ்சல் மேரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment