திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதலாம் தள கூட்டரங்கில் திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை மற்றும் விஐடி வேலூர் நிலையான ஊடக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம் இணைந்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கி பயிற்சி அளித்தல் வகுப்பினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம் வேலூர் உதவி திட்ட அலுவலர் பார்த்திபன் மற்றும் இணை இயக்குனர் சுந்தர்ராஜ் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment