திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை அதிமுக முன்னாள் பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி தலைமையில் தமிழகத்தில் போதை பொருள் மாநிலமாக மாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் திமுக அரசு பதிவி ஏற்ற நாளிலிருந்து சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு உள்ளதாகவும் தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருகிறது, இளம் தலைமுறையினர் எதிர்காலம் சீரழிந்து வருகிறது, போதைப் பொருள் கடத்தல் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி சுமார் 1000க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment