திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு தண்டபாணி சுவாமி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது, இந்த நிலையில் இன்று பங்குனி பதினோராம் நாள் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பம்பை,சிலம்பாட்டம்,மயிலாட்டம்,மற்றும் முருகன் பக்தி பாடல்களுடன் காவடி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து கோவிலுக்கு வந்து முருகபெருமானை வெளிப்பட்டார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment