கதிரிமங்கலம் கிராமத்தில் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 April 2024

கதிரிமங்கலம் கிராமத்தில் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய மாவட்ட ஆட்சியர்.

தமிழக முழுவதும் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் கிராமம் என்.எம்.கோயில் குருமன்ஸ் வட்டம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான தர்ப்பகராஜ் நீண்ட வரிசையில் இன்று தனக்கு பிடித்தமான திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


- செய்தியாளர் கோபிநாத். 

No comments:

Post a Comment

Post Top Ad