பொன்னியம்மன் கோவில் தெருவில் திருப்பதி கெங்கை அம்மன் திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 April 2024

பொன்னியம்மன் கோவில் தெருவில் திருப்பதி கெங்கை அம்மன் திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் சித்தம் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதற்காலை யாக வேள்வி பூஜைகள் மற்றும் இரண்டாம் கால வேள்வி பூஜைகள், பம்பை மேல வாத்தியங்கள் முடழங்க திருக்கோவிலுக்கு சீர் கொண்டு வருதல், திரு கல்யாண வைபவம், மகா தேவாரதனை உன்கிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


கோபுரத்தின் மேலே கோபுர விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி பின்னர்  பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது, இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என்ற பக்தி முழக்கத்துடன் மாரியம்மனை வழிபட்டனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad