புதூர் நாடு அடுத்த வழுதலப்பட்டு பகுதியை சேர்ந்த பெண்மணியின் வீட்டை அடியாட்களுடன் சென்று அடித்து உதைத்து தரைமட்டமாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 April 2024

புதூர் நாடு அடுத்த வழுதலப்பட்டு பகுதியை சேர்ந்த பெண்மணியின் வீட்டை அடியாட்களுடன் சென்று அடித்து உதைத்து தரைமட்டமாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.


திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு  வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜி அவரது மனைவி காளியம்மாள் அதே பகுதியை சேர்ந்த அவரது அண்ணன் ராஜேந்திரன் ரயில் விபத்தால் இறந்து போனார். இவருடைய மனைவி ராமக்காள் விற்ற சொத்தில் தனக்கு பாத்தியம் உண்டு என அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி திருப்பத்தூரில் இருந்து அடியாட்கள் சுமார் 40 பேரை அழைத்து சென்று ராஜி -காளியம்மாள் இவர்களின் வீட்டை அடித்து உடைத்து வீட்டை தரைமட்டமாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ராமக்காள் தனது கணவரின் தம்பியுடன் சொத்து சம்பந்தமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமக்காள்  அடியாட்களுடன் சென்று வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/