தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 April 2024

தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் அவருடைய  மகன் சபரி ஆகியோர் காஞ்சிபுரத்துக்கு வைக்கோல் ஏற்ற தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்  அப்போது திருப்பத்தூர் அடுத்த தர்மபுரி மேம்பாலம் கீழ் வந்து கொண்டிருந்தபோது அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை  இன்று காலை 8 மணி அளவில்  NNB என்ற தனியார்  பேருந்து தர்மபுரி நோக்கி  சென்று கொண்டிருந்த போது அப்போது தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் செல்லும்பொழுது திடீரென ஈச்சர் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.


இந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த சபரி, தேவராஜ், கணேசன், ஜமுனா, நாகராஜ், நவாப், சாகித், சக்கரை, பவானி, தாமோதரன், வள்ளி, உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக  கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவ குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/