திருப்பத்தூர் இருசக்கர பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாகச் சென்றனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 1 May 2024

திருப்பத்தூர் இருசக்கர பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாகச் சென்றனர்.


138வது மே தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மணவாளன் தலைமையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை அமைதி  பேரணியாக வந்தனர். அதன் பின்னர் பாச்சல் கிராமத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க அலுவலகத்தில் சங்ககொடியை ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வில் துணைத்தலைவர் குபேந்திரன் செயலாளர்கள் அன்பு, சீனிவாசன், சங்கர், திருப்பதி, மூர்த்தி, சரவணன், சங்க நிர்வாகிகள் என பலர் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டனர். 


-  மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/