ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 August 2024

ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது 


இதனை தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் உள்ள உயர்நிலைப்பள்ளி பயிலும் மாணவிகளுக்கு 4750 ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டியை 157 பேருக்கு  ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. ஜோலார்பேட்டை அன்பழகன், தலைவர் சத்யா சதீஷ். ஜோலார்பேட்டை கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் ஆகியோரால்  வழங்கப்பட்டது.


இதில் அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்


- செய்தியாளர்  கோபிநாத்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/