பசலிக்குட்டை ஏ.கே. மோட்டூர், திம்மணாமத்தூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் கடை ,அங்கன்வாடி கட்டிடம், உலர்களத்துடன் கூடிய தரம்பிரிப்புகூடம் ஆகியவற்றை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 August 2024

பசலிக்குட்டை ஏ.கே. மோட்டூர், திம்மணாமத்தூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் கடை ,அங்கன்வாடி கட்டிடம், உலர்களத்துடன் கூடிய தரம்பிரிப்புகூடம் ஆகியவற்றை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிக்குட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுதூரம் நடந்து சென்று திம்மணாமத்தூர் பகுதியில் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்த நிலையில் தங்களுடைய பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு பசலிகுட்டை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடை திறப்பு விழா அதேபோல் ஏ.கே. மோட்டூர் அண்ணாநகர் காலனி பகுதியில் 17ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வந்த நிலையில் AGAMT திட்டத்தின் கீழ் ரூபாய் 14. 31 லட்சம் மதிப்பில் வண்ணப்படங்கள், எழுத்துக்கள் வரையப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா மற்றும் திம்மணாமத்தூர் பகுதியில் வேளாண் நிதி நிலை அறிக்கை 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 34 லட்சம் மதிப்பில் உலர்களத்துடன் கூடிய தரம்பிரிப்புகூடம் திறப்பு விழா உள்ளிட்டவை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு ரிப்பன்வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மற்றும் ,ஒன்றிய குழு தலைவர் மாவட்ட கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் வேலு, வார்டு உறுப்பினர் ஊராட்சி செயலர் திமுக கட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/