திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் அறிவுத்திறன் நூலகத்தை திறந்து வைக்க வந்த எஸ்பிக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்ற சிறுமி - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 5 August 2024

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் அறிவுத்திறன் நூலகத்தை திறந்து வைக்க வந்த எஸ்பிக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்ற சிறுமி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல்கிராமத்தில் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது.


மேலும் இங்குள்ள ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள், மற்றும் காவலர்களின் மகன்கள் உள்ளிட்டோம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவும் அதேபோல் உதவி ஆய்வாளர் தேர்வு உள்ளிட்ட எழுத பயன்படும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுத்திறன் நூலகத்தை திறந்து வைக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். 


அப்போது போலீசார் அவரை உற்சாகமாக வரவேற்றனர் இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னர் அறிவுத்திறன் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன எனவும் பார்வையிட்டார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/