திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 March 2022

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது.

எம்பிபிஎஸ் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவம் செய்ய முடியாது பொதுமக்கள் விழிப்புடன் இருங்கள். போலி மருத்துவர்களை களையும் பணியில் ஈடுபட்ட பொழுது மருத்துவ இணை இயக்குனர் விளக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குனராக புதியதாக மருத்துவர் மாரிமுத்து  பதவியேற்றுள்ள நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள போலி மருத்துவர்களை கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.


அப்பொழுது திருப்பத்தூர் அடுத்த தாமலேரி முத்தூர் பகுதியில் முருகன் மகன் சம்பத்(35) என்பவர் எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் செய்யும் தகவல் அறிந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்.


இவர் ஏற்கனவே ஒரு முறை போலி மருத்துவர் என  கைது செய்யப்பட்டு மீண்டும் அதே பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


பின்பு சம்பத்தை  ஜோலார்பேட்டை காவல் துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர், அப்போது மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து பொதுமக்களிடம்  கூறுகையில்..


எம்பிபிஎஸ் முடித்து விட்டு தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் அதுமட்டுமின்றி டிஎன்எம்சி யிலும் பதிவு செய்ய வேண்டும் அதற்குப் பிறகு மருத்துவ பயிற்சி பெற்று முறையாக மருத்துவம் செய்ய வேண்டும். 


இது எதுவும் இல்லாத பட்சத்தில் எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து முடித்து இருந்தாலும் மருத்துவம் செய்ய தகுதியற்றவர். இது எம்பிபிஎஸ் க்கு மட்டும் பொருந்தாது பிடிஎஸ், பி எச் எம் எஸ், நர்சிங் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவப் படிப்பிற்கும் பொருந்தும் என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்கிற வரிகளை முனு முனுத்துக்கொண்டு  அங்கு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad