திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த சேம்பரை பகுதியில் புலியூரில் இருந்து பிக்கப் வேன் மூலம் பயணம் செய்த 38 பேர் விபத்துக்குள்ளாகி னர். அப்போது 11 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்து திருப்பத்தூர் தர்மபுரி அடுக்கம்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து நடந்த ஓரிரு மணி நேரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விபத்து குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை அறிவித்ததுடன் விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று புலியூர் கிராமத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஏவா வேலு உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பத்திற்கு முதலமைச்சரின் உத்தரவுபடி வழங்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலைகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் வழங்கினார்.
அப்போது அமைச்சர் ஏவா வேலு கூறுகையில்: பிறப்பும் இறப்பும் இயற்கையானது என்றாலும் இந்த விபத்து மூலமாக அமைந்த உயர் இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த 2ஆம் தேதி டெல்லியில் இருந்த முதலமைச்சர் தொலைக்காட்சிகளில் விபத்து குறித்த செய்தியைப் பார்த்ததும் சுமார் ஒரு மணிநேரம் யாரிடமும் பேசவில்லை. பின்பு நேற்றைய தினம் என்னிடம் தொடர்பு கொண்டு என் சார்பாக விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபத்தை நீங்கள் நேரில் சென்று தெரிவியுங்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி உயிரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவிற்காக 50000 ரூபாயும் அரசின் சார்பாக வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று கூறி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் சார் ஆட்சியர் வட்டாட்சியர் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment