திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அடுத்த சின்ன குனிச்சி பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 25ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவை டெல்லி கால்நடை வளர்ப்பு முனைப்பு அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரி மிட்டல் திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் லட்சுமி மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோருடன் சென்று எருதுவிடும் பாதையில் காளைகளுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பின்பு அனைத்துவித பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டதை அறிந்து விழாவை நடத்த அனுமதி அளித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா மாநில சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை குறைந்த நொடியில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கு முதல் பரிசாக 65 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 55 ஆயிரம் பரிசு என சுமார் 35 வரையலான பரிசுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment