அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் சுதாகரன் ரம்யா இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் இருக்கும் ரம்யாவின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பாமக கூட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இன்று பாமக கூட்டம் இருப்பதால் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி பீரோவில் வைக்காமல் கட்டில் மீது உள்ள பேகில் வைத்துவிட்டு இரவு நிர்மலாவும் ராஜாவும் தனித்தனி அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தை நிர்மலாவின் முகத்தில் அடித்ததும் பதறியடித்துக் கொண்டு எழுந்து வந்த நிர்மலா தன்னுடைய மகன் சுதாகரன் வந்து விட்டானோ என்கிற எண்ணத்தில் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.
பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து அறையில் இருந்த தன்னுடைய நகைகள் வைக்கப்பட்டிருந்த பேகை பார்த்த பொழுது 5 சவரன் நகை மற்றும் சுமார் 2500 ரூபாய் பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்பு இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கூறி அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு அதே பகுதியின் பக்கத்து தெருவில் 30 சவரன் நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment