நாடாளும் மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 20 April 2022

நாடாளும் மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் நாடாளும் மக்கள் கட்சி சார்பாக பொதுக்குழுக் கூட்டம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நிறுவனத் தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ. அக்னிசெல்வராசு தலைமையில் மாநில தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலையில் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தலைவர்  சுகவாணன் வரவேற்புரை கூறு 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பட எழுத்தாளர் ஏ.ஜே .பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், மற்றும் ஏகே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு. வேலு வரவேற்புரை சிறப்புரை என பலர் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் உணவு வழங்கி விழாவை சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சியை திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் கி. தமிழ்மொழி ஒருங்கிணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad