திருப்பத்தூர் மாவட்ட நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு அமர் குஷ்வாஹா ஐஏஎஸ் அவர்கள் தலைமை தாங்கினார் இந்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் விஜய சரவண மஹாலில் நடைபெற்றது இவ்விழாவில் தலைமை உரையாற்றிய திரு அமர் குஷ்வாகா ஐஏஎஸ் அவர்கள் பேரூராட்சிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முதலியோருக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுகளை வழங்கினார்.
இதில் திமுக மாவட்ட ஊராட்சி தலைவர் என் கே ஆர் சூரியகுமார் வாணியம்பாடி திமுகநகர கழக செயலாளர் பிஎஸ் சாரதி, நகர மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், எஸ் ராஜேந்திரன் நகர செயலாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண் உற்பத்தியாளர் சங்க தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகளும் அரசு சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுகழக பிரமுகர்கள் நிர்வாகிகளும் முன்னோடிகள் என பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment