இந்நிலையில் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக வந்துசெல்லும் இடமாக இருப்பதால் காவல் உதவி செயலியை அனைவரிடமும் கொண்டு போய் விரைவாக சேர்க்கும் பொருட்டு திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் காவலர்கள் இன்று முகாம் அமைத்து சுமார் 500-க்கும் மேற்பட்டோரிடம் காவல் செயலியின் முக்கியத்துவம் மற்றும் அதை எப்படி அவரவர் மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி ஆபத்து வரும் பொழுது அதை பயன்படுத்துவது உள்ளிட்ட விளக்கங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது காவல் உதவி செயலி ஒரு காவலர் எப்பொழுதும் தங்களுடன் இருக்கிறார் என்கிற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்த மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் பதிவிறக்கம் செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment