திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது, இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர், இந்த நிலையில் இன்று மாலை திடீரென திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, பாச்சல்,கசிநாயக்கன்பட்டி, ஹவுசிங்போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று வீசி,இடிமின்னலுடன் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனையடுத்து சாலை ஓரங்களில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. திருப்பத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காற்றுடன் கூடிய கனமழை பெய்த்தால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது, இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment