திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு புலியூரிலிருந்து சேம்பறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பிக்கப் வேனில் 30க்கும் மேற்பட்டோர் சென்றனர். அப்போது வாகனம் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானதில் 11பெண்கள் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி,வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.ரமேஷ்,திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர். திருப்பதி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து பால்,பழம்,பிரட்,ஆகியவற்றை வழங்கினர்.
No comments:
Post a Comment