திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், 1/04/22 மாலை 5 மணி அளவில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், சமூகநல திட்ட நேரடி உதவி ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்.
CPS முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, துணை வட்டாட்சியர் மறுவரையறை வெளியிடப்பட வேண்டும்.
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் வழங்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment