தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குரங்குகள் தண்ணீருக்காக அலை மோதி வருகின்றன, இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளே நுழைந்தன.
பின்னர் அலுவலக வெளியே இருந்த தண்ணீர் குழாயை திறந்து தாகம் தீர ஒரு குரங்கு தண்ணீர் குடித்துவிட்டு சுவரின் மீது ஏறிச் சென்றது, இச்சம்பவம் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்தது.
அதுமட்டுமன்றி வனத்துறையினர் திருப்பத்தூர் நகர் பதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக குரங்குகள் தண்ணீர் அருந்தும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
No comments:
Post a Comment