திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் தோட்ட பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிட வளாகத்தில் மே மாதம் 16 ம் தேதி திங்கட்கிழமை இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, அரசு நிவாரணத் தொகை, குடிநீர் பிரச்சனை மற்றும் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் 287 மனுக்களை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
No comments:
Post a Comment