ஆம்பூர் அடுத்த ரபீக் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்கர் (45) சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தார்வழி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 80 அடி கிணற்றில் நேற்று மாலை 6 மணியளவில் தவறி விழுந்துள்ளார்,
இதனை தொடர்ந்து 3 மணி நேரத்திற்க்கும் மேலாக ஆம்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டர் மூலம் வெளியேற்றி அஸ்கரை தேடும் பணியில் ஈடுப்பட்ட வந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தினர்.
மீண்டும் இன்று காலை 6 மணியளவில் உடலை தேடும் பணி தொடர்ந்த தீயணைப்பு துறையினர் 9:30 மணியளவில் அஸ்கரின் உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர், மேலும் இந்நிகழ்வு குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...
No comments:
Post a Comment