அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 10 May 2022

அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்!!


தமிழ்நாடு அரசின், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக, அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் பொம்மிகுப்பம் ஊராட்சி, கிராம சேவை மைய வளாகத்தில் 10/05/2022 காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமினை ஊராட்சிமன்ற தலைவர், திருமதி. தேன்மொழி வெங்கடேசன் & ஒன்றிய கவுன்சிலர் எம்ஜி அவர்கள் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் பொம்மிகுப்பம் ஊராட்சிமன்ற துணைதலைவர் சிவக்குமார், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ஆனந்தராஜ், திரு.ராதாகிருட்டிணன், சமூக ஊடக மையம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை உட்பட கலந்து கொண்டனர். திரு. தனஞ்ஜெயன், உதவி வேளாண் அலுவலர், திரு. ராமச்சந்திரன் இளநிலை பொறியாளர், கால்நடை மருத்துவர், டாக்டர் சசிகலா வருவாய்துறை கிராம நிர்வாக அலுவலர் திரு.தினகரன் VAO, உட்பட கலந்து கொண்டனர்.


இந்த சிறப்பு முகாமில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம், கிசான் கார்டு வழங்குதல், கால்நடைகளுக்கு தடுப்பூசி, வேளாண் கருவிகள் பதிவு செய்தல் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த சிறப்பு முகாமில் உள்ளன இதை பயன்படுத்தி உழவர்கள் பயனடையுமாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad