கர்நாடகா மாநில மதுபானம் விற்பனை செய்தவர் கைது போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 14 May 2022

கர்நாடகா மாநில மதுபானம் விற்பனை செய்தவர் கைது போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி. மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புது ஓட்டல் தெருவில் கர்நாடகா மாநிலம் மதுபாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.


அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித். வயது 31 என்பவர் மது பாட்டிலை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


அதனை குறித்து அவரிடம் இருந்து 32 மதுபாட்டில் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் பின்னர் இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad