திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டைத் தெரு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு என தனி சிறப்புகள் உண்டு இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக கோயில் நிர்வாகத்தால் பிரம்ம உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
11 வது நாளான இன்று பிரம்ம உற்சவ நிறைவு நாளான இன்று திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், மேலும் பிரம்ம உற்சவரை அலங்காரம் செய்து பல்லாக்கில் வீதி வீதியாக கோயில் நிர்வாகத்தினர் தூக்கி சென்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் பிரம்ம உற்சவரின் அருள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment