திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி செல்லரபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று இல்லம் தேடி கல்வி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வெகு சிறப்பாக ஆண்டுவிழாவை கொண்டாடினர்.
இவ்விழாவில் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்து தலைமையுரை ஆற்றினார், அவரைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் விழாவில் உடனிருந்து உரையாற்றினார்கள், அதுமட்டுமின்றி இந்த ஆண்டு விழாவை சீரோடும் சிறப்போடும் ஏற்பாடு செய்து மாணவ செல்வங்களை ஊக்குவித்து ஆடிப்பாடி கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ் .கே. மேனகா விவேகானந்தன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கமலநாதன் வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை கண்டு களித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment