திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை நடத்தும் தோட்டக்கலை பயிற்சி விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
தோட்டக்கலை பண்ணையில் பயிற்சி நடைபெற்று வந்தது. இதில் திருப்பத்தூர் ஒன்றியம், கந்திலி ஒன்றியம், நாட்றம்பள்ளி ஒன்றியம், ஜோலார்பேட்டை ஒன்றியம், மாதனூர், ஆலங்காயம் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்து கொண்டனர் தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் மக்களுக்கு பயிற்சி கொடுத்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தாட்கோ மேனேஜர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், S. பிரேமா மாவட்ட மேலாளர் மற்றும் அ.க .பாத்திமா தோட்டக்கலை துணை இயக்குனர், ஆர். ராஜகுரு திருப்பத்தூர் மாவட்ட உதவி மேலாளர் என பல தோட்டக்கலை அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment