இரண்டாம் மனைவியான வசந்தா (60) இவருக்கு இளஞ்செழியன், ஷர்மிளா, சுபா என மூன்று பிள்ளைகள் உள்ளனர், இந்தநிலையில் சங்கர் இறந்ததன் காரணமாக அவருடைய பெயரில் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள 5728 சதுர அடியில் உள்ள சொத்தை இரண்டாம் மனைவியான வசந்தா, முதல் மனைவி மற்றும் அவருடைய பிள்ளைகளுக்கு தெரியாமல் திருப்பத்தூர் சார் பதிவாளர் ராதிகா ( பொறுப்பு) உடந்தையுடன் கடந்த 25 ஆம் தேதி பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து முதல் மனைவி மற்றும் அவருடைய பிள்ளைகளும் சார் பதிவாளர் ராதிகாவை கேட்கும்பொழுது முறையான பதில் அளிக்காமலும் அதிகாரத் திமிரிலும் பேசியுள்ளார். அதன் காரணமாக இன்று சாந்தி மற்றும் அவருடைய நான்கு பிள்ளைகளும் ஒன்றிணைந்து எங்களுக்கு தெரியாமல் பதிவு செய்த பத்திர ஆவணத்தை நீக்கக்கோரி முறையிட்டனர்.
மேலும் முதல் மனைவிக்குத் தெரியாமல் நிலத்தைப் பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர், இல்லாவிடில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment