திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தில் இருந்த நியாய விலை கடையை இரண்டாக பிரித்து தர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நியாய விலை கடை இரண்டாக பிரித்து சி.2537 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment